Friday 31 May 2019

ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தை அறிவது எப்படி?

ஜாதகம் என்பது ஒரு மனிதன் பிறக்கும் போது வான்வெளியில் அமைந்துள்ள கிரகங்களின் துல்லிய நிலையை குறிக்கிறது.
ஜாதகம் ஒருமனிதன் பிறக்கும் போது உள்ள கிரக நிலையை தான் குறிக்கிறது ஆனால் ஒரு மனிதனின் நிறம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நிர்ணயம் செய்யபட்டு விடுகிறது எனவே எவ்வாறு மனிதனின் நிறத்தை அறிய முடியும் என உங்களுக்கு ஐயம் எழலாம்..

ஆனால் இதற்கு விளக்கம் மிக எளிது நீங்களும் நானும் எப்போது எந்த இடத்தில் யாருக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வேண்டும் என்பதை ஏற்கனவே நம்மை படைத்த கடவுள் முடிவு செய்து விடுகிறார் எனவே நாம் எந்த நிறத்தில் இருக்கிறோமோ அதறக்கான கிரக நிலைகள் உருவாகும் போதுதான் நாம் பிறக்கிறோம் எனவே ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தையும் அறிய முடியும்...

உடல் நிறத்தை அறிய நவாம்சம் மிக முக்கியம் மேலும் இந்த விதியை இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும்‌.
ஜாதகத்தில் லக்னம் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளது, ராசி நாதன், சந்திரன் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளார் ஆகியவையை கணக்கிட்டு ஜாதகரின் நிறத்தை அறிய முடியும்.

குருவின் வீடுகளான மீனமும் தனும் மிளிர்ந்த தங்க நிறத்தை குறிக்கும், செவ்வாயின் வீடுகளான மகரமும் விருச்சிகமும் செந்நிறத்தை குறிக்கும், சுக்கிரனின் ரிஷப துலாம் ராசிகள் வெள்ளை நிறத்தையும், புதன் பொதுவான நிறத்தையும் சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் போது வெளிர் நிறத்தையும் அம்மாவாசைக்கு அருகில் இருக்கும் போது பெதுவான நிறத்தையும் குறிப்பார், சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தையும் சனி அடர்ந்த கருப்பு நிறத்தையும் குறிப்பார்கள்.

முதலில் லக்னம் எந்த நவாம்சத்தில் உள்ளது என காண வேண்டும் நவாம்ச லக்னம் சனியின் மகர கும்ப வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் கருப்பாக இருப்பார், குருவின் வீடுகளில் நவாம்ச லக்னம் அமையும் போது நல்ல நிறத்துடன் இருப்பார்.

மற்ற அமைப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் சந்திரன் நம் உடலை குறிக்கிறார், சந்திரன் அமந்த ராசி அதிபதி சனி ஆக இருந்தால் கருப்பாக இருப்பார் மற்ற கிரகங்களாக இருக்கும் போது அந்த கிரகத்தின் தன்மை நிறத்தில் இருப்பார்...

இதில் ஒரு அமைப்பில் ஜாதகர் நல்ல நிறம் உள்ளவர் என்றும் மற்றும் ஒரு அமைப்பில் ஜாதகர் கருமை நிறம் உள்ளவர் என்ற அமைப்பும் வரும் போது ஜாதகர் பொதுவான நிறம் உள்ளவர் என கொள்ள வேண்டும்..

1) நவாம்ச லக்னம்
2) ராசி அதிபதி
3) சந்திரன் நவாம்சத்தில் அமர்ந்த ராசி

இதில் 3ம் நல்ல நிறமுடைய அமைப்பில் இருக்கும் போது ஜாதகர் நல்ல வெள்ளை நிறம் உடையவராக இருப்பர்‌. 2 அமைப்பு நல்ல நிறமுடையவை மற்றொன்று கருமை நிற அமைப்பு எனில் ஜாதகர் பொது நிறத்திற்கு சற்று அதிக நிறத்தில் இருப்பார். இவ்வாறு கணக்கிட வேண்டும்..
குறிப்பு: நவாம்ச லக்னம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மாறுபடும் எனவே துல்லியமான பிறந்த நேரம் தேவைப்படும்

Wednesday 22 May 2019

ஏழரைச்சனி கெடுதல் மட்டும்தான் செய்யுமா?

ஏழரைச்சனி

சனி கோட்சாரமாக ஜென்ம ராசிக்கு முந்தய ராசியிலும், ஜென்ம ராசியிலும் ஜென்ம ராசிக்கு 2ல் வருவதுமான ஏழரை வருடங்கள் ஏழரைச்சனி காலம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்களாக நகர்வார்.

இதில் முதல் இரண்டரை வருடங்களில் அதாவது ஜென்ம ராசிக்கு முந்தய ராசியில் இருக்கும் போது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருக்வாக்கும் சூழ்நிலைகளைதான் உருவாக்குவார் தவிற பெரும்பாலும் பிரச்சனைகளை தருவதில்லை, உதாரணமாக ஒரு வாலிபன் வேலைப்பார்க்கும் இடத்தில் அல்லது கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்த ஏழரைச்சனி தொடங்குகிறது எனில் ஏழரை வருங்களில் முதல் இரண்டரை வருடங்கள் ஜாதகருக்கு காதல் தோன்றும் இதிலும் துல்லியமாக சொல்ல போனால் அந்த இரண்டரை வருடங்களில் முதல் ஒரு வருடத்தில் பெண்களின் நட்பு ஏற்படும் அடுத்த ஒன்றரை வருடங்களில் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் தோன்றும்..

Source: Google

இத்தகைய காலகட்டத்தில் எந்த விதமான பெரிய பிரச்சனைகளோ , தொந்தரவுகளோ இருக்காது, இரண்டாவது இரண்டரை வருடத்தில் தான் பிரச்சனைகள் வரும் இந்த காலத்தில் மிகுந்த மன அழுத்தம் ஏற்படலாம்.. வாழ்நாள் முடியும் வரை இந்த காலத்தில் நடந்தவை ஜாதகருக்கு நினைவு இருக்கும்..

இதில் இன்னும் துல்லியமாக சொல்ல போனால், ஜென்ம நட்சத்திரத்திற்கு முந்தய நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு எதிராக பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும் அல்லது ஜாதகருக்கு எதிராக ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் வலுவடையும். ஜென்ம நட்சத்திரத்தை சனி கடந்த பின் தோன்றிய பிரச்சனைகள் மிகவும் மெதுவாக மறைய தொடங்கும்.
கடைசி இரண்டரை வருடங்களில் ஜாதகர் பல அனுபவங்களை கடந்த கால வாழ்க்கை மூலம் கற்றிருப்பார்.

இதில் காதல் என்பது ஒரு எடுத்துக்காட்டாக தான் சொல்லப்பட்டுள்ளது, பெரும் பண கஷ்டமும், தொழிலில் பிரச்சனைகளும் இந்த கால கட்டங்களில் ஏற்படலாம்.
எந்த பிரச்சனை ஏழரை சனி காலத்தில் வரும் என்பதை அப்போது ஜாதகருக்கு நடக்கும் தசா புக்திகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் எது பாதிக்கப்பட்டால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆவாரோ அது சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்..

ஒரு கல்லூரி முடித்த வாலிபர் காதலில் எந்த பிரச்சனை வந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆக மாட்டார் எனில் அவருக்கு காதல் விவகாரங்களில் பிரச்சனை வராது, வேறு எதில் பிரச்சனை வந்தால் ஜாதகருக்கு மன அழுத்தம் வருமோ அதில் தான் பிரச்சனைகள் உண்டாகும்.

ஏழரை சனி நடைபெரும் காலங்களில் காதலிக்கவோ , புதிய தொழில் தொடங்கவோ, இருக்கும் வேலையை விடுவதோ, புதிய முயற்சிகள் மேற்கொள்வதையோ தவிர்த்தல் நலம். யாரையும் நம்பி முன்பணமோ , பணமோ கொடுக்க கூடாது
சில நேரங்களில் குழந்தைகளின் ஏழரை சனி தகபனையும் தாயையும் பாதிக்கும், ஆனால் அந்த நேரத்தில் தாயின் ஜாதகத்திலும், தகப்பனின் ஜாதகத்திலும் கஷ்டபடும் அமைப்பு இருந்தால் மட்டுமே இது பெரும்பாலும் நடைபெரும்.

ஏழரைசனிக்கு விதிவிலக்கு இல்லையா?

கண்டிப்பாக ஜோதிடத்தில் ஒரு  விதிக்கு பல விதி விலக்குகள் உண்டு. ஜாதகத்தில் சனி வலிமை குறைந்து சுபர்களின் சம்மந்தம் பெருவது, பாபர்களில் சம்மந்தம் பெறாமல் சுபர்களின் வீட்டில் அமர்வது, நவாம்சத்தில் சுபர்களுடன் சேர்ந்து சுபர்களின் வீட்டில் இருப்பது, லக்னத்திற்கு 6,8,12ல் மறைந்து கேது சம்மந்தம் பெருவது போன்ற நிலைகளில் சென்ம ஜாதகத்தில் சனி இருந்தாலும்,
ஜென்ம ராசி மகரம், கும்பமாக இருந்து சனி பாபர்களின் சம்மந்தம் பெறாமல் இருந்தாலும் ஏழரை சனியில் தாக்கம் குறைவாக இருக்கும்.
அதே நேரத்தில் ஜென்ம ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று பாவர்களின் சம்மந்தம் பெற்று, நவாம்சத்திலும் பாவர்களின் சம்மந்தம் பெறுவது ஆகியவை ஏழறை சனியின் தாக்கத்தை அதிகரிக்கும்..

ஏழரை சனி பரிகாரங்கள்

ஏழரைசனி காலங்களில் சனியின் ஸ்தலங்களுக்கு செல்ல கூடாது. உடல் ஊனம் பெற்றவர்களுக்கு சனி கிழமைகளில் பகல் 1 முதல் 2 மணிவரை உதவிகள் செய்யலாம்,
அருகில் இருக்கும் பழைய சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நெய் தீபம் சனி கிழமைகளில் காலை 6 to 7 மணிவரை ஏற்றலாம்...
,